GuidePedia

0
பிரேசில் நாட்டில் நபர் ஒருவரின் குடலில் இருந்து 2 அடி நீளமுள்ள மீன் அறுவை சிகிச்சை மூலம் உயிரோடு அகற்றப்பட்டுள்ளது.

பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடலை ஸ்கேன் செய்தபோது, அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது.

சுமார் 2 அடி நீளமிருந்த மீன் அறுவை சிகிச்சை மூலம் உயிரோடு வெளியேற்றப்பட்டது. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

அறுவை சிகிச்சையின்போது. உடன் இருந்த மருத்துவர்கள் அதனை கானொளி எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்த அந்த நபர், தனது அனுமதி இல்லாமல் தனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை படமாக்கப்பட்டதாகவும், அந்த கானொளி இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முறையான அனுமதி இல்லாமல் அறுவை சிகிச்சையை படமாக்கியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

 
Top